யார் பிராமணர்?
வியாசர் சொல்கிறார்."ஜன்மனோ ஜாயதே சூத்ரஹ,கர்மனோ பவதி பிராமணஹ" என்று.
இவ்வுலகில் பிறக்கும் அனைவரும் பிறப்பால் சூத்திரர்களே.
பிராமணர் உட்பட. அவர்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும்,
ஆசார அனுஷ்டானங்கள், கற்கும் வேதங்கள், மந்திரங்கள்,
நடத்தும் தூய வாழ்க்கை, பேசும் உண்மைகள், பிறர் பொருள்
மேல் ஆசைப்படாதல், சுய
நலமில்லாது பொதுநலமாக இருப்பது போன்ற நற்செயல்களால்
அவன் பிராமணனாகிறான்.